காங்கிரஸ் சார்பாக நாளை ஆர்ப்பாட்டம்
தேசப்பிதா மகாத்மா காந்தியை ஆளுநர் ஆர். என். ரவி இழிவுபடுத்திவிட்டதாக கூறி நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. சென்னை சின்னமலை ராஜீவ்காந்தியின் சிலை அருகே மாலை 4 மணியளவில் மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் உண்மையில் தேசத்தந்தை என்று ஆளுநர் ரவி சமீபத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :