மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

by Staff / 28-01-2024 04:15:44pm
மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

டெல்லியில் உள்ள ஐஎன்ஏ மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 7.38 மணியளவில் ஓடும் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மனிதன் பிளாட்பாரத்தில் ஓடி வந்து மற்ற பயணிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மெட்ரோ ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via