தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு-.கனிமொழி தலைமையில்

by Staff / 05-02-2024 01:28:23pm
 தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு-.கனிமொழி தலைமையில்

 திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. .திமுக துணை பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் டி. கே. எஸ். இளங்கோவன் (முன்னாள் எம். பி), தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, தமிழக அரசு தலைமைக் கொறடா கோ. வி. செழியன் எம். எல். ஏ, சி. வி. எம். பி. எழிலரசன் எம். எல். ஏ, கே. ஆர். என். ராஜேஸ்குமார் எம். பி, எம். எம். அப்துல்லா எம். பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம். எல். ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்

,, தூத்துக்குடியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை நேரடியாக கேட்டு மனுக்களாகப் பெற்று வருகிறார்கள்.

 

Tags :

Share via