ஆர்ப்பாட்டத்தில் திமுக கலந்து கொள்ளும் : முதலமைச்சர்

by Staff / 06-02-2024 01:27:06pm
ஆர்ப்பாட்டத்தில் திமுக கலந்து கொள்ளும் : முதலமைச்சர்

நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என முதலமைச்சர் மு. க‌.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தெற்கில் நாம், தோழர் பினராயி விஜயன் அவர்கள், கிழக்கில் மரியாதைக்குரிய சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான். கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via