சகோதரியின் கள்ளகாதலனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சகோதரன்....

by Admin / 03-08-2021 03:28:43pm
சகோதரியின் கள்ளகாதலனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சகோதரன்....



காஞ்சிபுரத்தில் சகோதரியின் கள்ளக்காதலனை 12 வருடம் காத்திருந்து தம்பியே கொலை செய்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காஞ்சிபுரம் அடுத்த சின்ன ஐயங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷீலா. கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு  கனகராஜ் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கணவனை பிரிந்த ஷீலா இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
 
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட கனகராஜ் எந்த அச்சமுமின்றி ஷீலாவுடன் நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுவயதிலேயே பார்த்து வளர்ந்த ஷீலாவின் தம்பி ராஜ், கடந்த  10 வருடங்களாக கனகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

தற்போது 21 வயதாகும் ராஜ்  நேற்று இரவு தனது நண்பர்கள் மற்றும் கனகராஜுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இது தான் சந்தர்ப்பம் என எண்ணிய ராஜ் தனது கையில் உள்ள மதுபாட்டிலால் கனகராஜை குத்தி கொலை செய்தார்.

பின்னர் ராஜ் மற்றும் அவரது நண்பர்களும் அம்மிகல்லை கொண்டு கனகராஜின் முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த கொடூர கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via