உத்தரகாண்ட் வன்முறையில் 4 பேர் பலி.

by Staff / 09-02-2024 11:54:18am
உத்தரகாண்ட் வன்முறையில் 4 பேர் பலி.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா மற்றும் மசூதி இடிப்பு நடவடிக்கைகளால் வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இணையதள சேவையை அரசு முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கலவரக் காரர்களை கண்டதும் சுட அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via