தாகத்தால் தவித்த யானைக்கு ஐஸ்கிரீம் கொடுத்த ஐஸ் வியாபாரி.

by Editor / 17-02-2024 11:03:50pm
தாகத்தால் தவித்த யானைக்கு ஐஸ்கிரீம் கொடுத்த ஐஸ் வியாபாரி.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள கடையநோடை வளவன் நகர் பகுதியில் யானை ஒன்று அதன் பாகனுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த யானைக்கு தாகம் தவித்ததாக தெரிகிறது. இதனால் தாகத்தால் தவித்த அந்த யானை அந்த பகுதியில் சாலையோரம் உள்ள குடிதண்ணீர் பைப்பில் தண்ணீரை திறந்து அந்த பைப்பில் தும்பிக்கை வழியாக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஐஸ் வியாபாரி ஒருவர் அந்த யானைக்கு குச்சி ஐஸை கொடுத்தார். இதனையடுத்து அந்த  ஐஸ் வியாபாரி  எனக்கு இன்னும் போனி ஆகல ஆனாலும் பரவாயில்லை யானைக்கு தானே ஐஸ் கொடுத்தேன்  என கூறுகிறார். அந்த ஐஸ் வியாபாரி செய்த செயலை பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்சாட் 3 டிஎஸ் அதிநவீன வானிலை செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதை ன் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்மாலைப்பொழுதில் திரண்டுவந்து வேடிக்கைப்பார்த்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

 

Tags : தாகத்தால் தவித்த யானைக்கு ஐஸ்கிரீம் கொடுத்த ஐஸ் வியாபாரி

Share via