நாளை ப்ளஸ் 1 தேர்வு 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

by Editor / 03-03-2024 09:00:49am
நாளை  ப்ளஸ் 1 தேர்வு 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது.
இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகளாக 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

 

Tags : நாளை ப்ளஸ் 1 தேர்வு 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

Share via