போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தை

by Staff / 10-03-2024 12:42:26pm
போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தை

டெல்லியில் கேசோபூர் அருகே உள்ள ஆலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்று 40 அடி ஆழமுள்ள போர்வெல் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கிணற்றில் சிக்கிக்கொண்ட தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீப்புப் படை NDRF குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குழந்தையை மீட்க குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக புதிய ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு வருகிறது. விரைவில் குழந்தை மீட்கப்படும் என்று மீப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via