போதைப்பொருள் விற்ற பாஜ நிர்வாகி கைது

by Staff / 11-03-2024 03:06:35pm
போதைப்பொருள் விற்ற பாஜ நிர்வாகி கைது

 வடசென்னை பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க, நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை நைனியப்பன் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில், போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொருக்குப்பேட்டை ஆய்வாளர் யுவராஜ் தலைமையில் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா, குட்கா உள்ளிட்டவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த பச்சையம்மாள் (34), வீட்டில் சோதனை செய்தபோது 25 கிலோ ஹான்ஸ், 2 கிலோ மாவா, 30 கிலோ ஜர்தா இருப்பது தெரிந்தது.
அவர்கள் 4 பேரையும், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய முனியம்மாள் (எ) தேவி (46), சத்யா ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கைதான லோகேஷ், நரேந்தர் ஆகியோர் முனியம்மாளின் மகன்கள் என்பதும், இவர்கள் குடும்பமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

 

Tags :

Share via