குடிபோதையில் சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை

by Staff / 16-03-2024 11:53:51am
குடிபோதையில் சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை

ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை குடிபோதையில் அவரது தந்தை பலாத்காரம் செய்துள்ளார். அந்த நேரத்தில் வேலைக்குச் சென்ற தாய் மாலையில் திரும்பி வந்ததும் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் தனது கணவர் மீது புகார் அளித்தார். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via