சென்னையில் தொடரும் போதை ஊசி மரணம்

by Staff / 22-03-2024 03:28:14pm
சென்னையில் தொடரும் போதை ஊசி மரணம்

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் என்ற கருப்பு கோகுல் (22). கடந்த 2 ஆண்டுகளாக போதைக்கு அடிமையான இவர், நண்பர்களுடன் போதை ஊசிகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று கோகுல் நண்பர்களுடன் சேர்ந்து தட்டாங்குளம் விளையாட்டு மைதானம் அருகே போதை ஊசியை பயன்படுத்தியுள்ளார். மயக்கமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via