திருப்பூரில் மாமியாரை கொன்ற மருமகள் பரபரப்பு வாக்குமூலம்

by Admin / 05-08-2021 03:55:01pm
திருப்பூரில் மாமியாரை கொன்ற மருமகள் பரபரப்பு வாக்குமூலம்


   
சரவணகுமார் தொந்தரவு செய்வது குறித்து பிருந்தாவின் தங்கை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் 15-வேலம்பாளையம்  திலகர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மயங்காத்தாள் (வயது 65). இவர்களுக்கு  குழந்தைகள் இல்லை. இதனால் ராமசாமி 2-வதாக சகுந்தலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கார்த்திக், சரவணக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் சகுந்தலா இறந்து விட்டார். இதையடுத்து ராமசாமி, மயங்காத்தாள் ஆகியோருடன் கார்த்திக், சரவணக்குமார் ஆகியோர் வசித்து வந்தனர். இந்தநிலையில் கார்த்திக் மனைவி பிருந்தாவின்  தங்கையை சரவணக்குமார் காதலித்து வந்துள்ளார். திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே பிருந்தாவின் தங்கை வேலைக்காக சென்னை சென்று விட்டார்.
 
இருப்பினும் சரவணக்குமார் பிருந்தா தங்கையின் செல்போனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் பிருந்தாவின் தங்கை காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார் பிருந்தா தங்கையின் தோழிகளை தொடர்பு கொண்டு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

சரவணகுமார் தொந்தரவு செய்வது குறித்து பிருந்தாவின் தங்கை அவரது  பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  பிருந்தாவின் தந்தை அன்பழகன், சகோதரர் சுஷாந்த் , உறவினர்  ஸ்ரீராம் ஆகியோர் ராமசாமி  வீட்டிற்கு வந்தனர். அங்கு பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில் பிருந்தாவின் கையை மயங்காத்தாள் கடித்ததாக கூறப்படுகிறது.

வலி தாங்க முடியாமல் அலறிய பிருந்தா  மயங்காத்தாளைதள்ளி விட்ட போது  சுவரில் தலை மோதி மயங்காத்தாள் இறந்தது போலீசார் விசாரணையில்  தெரியவந்துள்ளது. இதனை பிருந்தா போலீசில் வாக்கு மூலமாகவும் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via