போலீசார் அதிரடி சோதனையில் மது விற்ற 66 பேர் கைது

by Staff / 31-03-2024 05:35:10pm
போலீசார் அதிரடி சோதனையில் மது விற்ற 66 பேர் கைது

திண்டுக்கல்லில் போலீசார் அதிரடி சோதனை மது விற்ற66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் ஆகியோர் உத்தரவின்படி மதுவிலக்கு போலீசார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீசார் ஆகியோர் திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர், சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்த சிவச்சந்திரன் (வயது 30), முகமது அலி கான் (43), சுரேஷ் (50), அர்ஜுனன் (42), கணேஷ்குமார் (41), மகுடீஸ்வரன் (37), சக்திவேல் (57), ராஜீவ் காந்தி (39) உள்ளிட்ட 66 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 750 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via