“கொள்கையாவது கூட்டணியாவது” ராமதாஸை விமர்சித்த ஜெயக்குமார்

by Staff / 02-04-2024 12:13:45pm
“கொள்கையாவது கூட்டணியாவது” ராமதாஸை விமர்சித்த ஜெயக்குமார்

வடசென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமக நிறுவனர் ராமதாஸை கடுமையாக விமர்சித்தார். “அன்புமணி என்கிற பெயரை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியதே ஜெயலலிதாதான். ஜெயலலிதா மட்டும் இல்லை என்றால் பாமக என்ற கட்சி வெளியிலேயே தெரிந்திருக்காது. கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது என செயல்படுபவர் ராமதாஸ் தான். பாமகவில் 5 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தனித்து நின்றிருந்தால் ஒரு எம்.எல்.ஏ ஜெயித்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
 

 

Tags :

Share via