முதல் டெஸ்ட் போட்டி;  இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட்:

by Editor / 05-08-2021 04:16:28pm
முதல் டெஸ்ட் போட்டி;  இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட்:

 


இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை 183 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.


விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்ட பிறகு இந்திய அணி ஆடும் முதலாவது டெஸ்ட் போட்டி என்பதாலும், 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் என்பதாலும் இந்த போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது.


இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் (ஆகஸ்ட் 4)  தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி, தனது துல்லியமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை நிலைகுலைய வைத்தது. பும்ரா, சமி ஆகியோர் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை சீரான இடைவெளியில் வெளியேற்றினர்.


65.4 ஓவர்கள் தாக்குப் பிடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் அடித்தார். பந்து வீச்சைப் பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளையும் சமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் களம் இறங்கி நிதிமாக ஆடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது 

 

Tags :

Share via