அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை -திமுக மனு

by Staff / 07-04-2024 03:40:05pm
அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை -திமுக மனு

தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளிடமிருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அந்த புகாரில், நெல்லை பாஜக வேட்பாளர் நயனார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும். அதேபோன்று தமிழ்நாட்டில் போட்டியிடும் அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என குய்ப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via