திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

by Editor / 09-04-2024 10:09:08am
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அருவிக்கு அருகாமையில் செல்லக்கூடாது.

 

Tags : திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Share via