ஏழைகளை கொல்வதுவே இவர்களின் ஏழ்மை ஒழிப்பு சீமான்

by Staff / 09-04-2024 12:28:36pm
ஏழைகளை கொல்வதுவே இவர்களின் ஏழ்மை ஒழிப்பு சீமான்

ஏழ்மையை ஒழிப்போம் என பாஜகவினர் ஏழைகளை கொன்று விடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'கிரகணம் வரும்போது சூரியனை பார்த்தால் கண் கெட்டுப்போகும். சூரியனுக்கு ஓட்டு போட்டால் நாடே கெட்டு போகும். நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம். பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும். 10 ஆண்டுகளாக ஆண்ட மோடி என்ன செய்து விட்டார்? ஏழ்மையை ஒழிப்போம் என ஏழைகளை கொன்று விடுவார்கள். எந்த மாநிலத்திற்கும் காங்கிரஸ், பாஜக தேவையில்லை' என்றார்.

 

Tags :

Share via