13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி ராஜபாண்டி (27) என்பவர் சென்னை கொருக்குபேட்டையில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை ராஜபாண்டியும் அவரது நண்பர் ரமேஷும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியைக் காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் அம்பலமானது. தொடர்ந்து நேற்று இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Tags :