ஓட்டுக்கு பணம் கொடுத்த இளைஞர் கைது

by Staff / 18-04-2024 04:38:15pm
ஓட்டுக்கு பணம் கொடுத்த இளைஞர் கைது

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ள நிலையில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டம் ராஜேந்திரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். ஆனால், அந்த இளைஞர் எந்த கட்சிக்கு ஆதரவாக பணம் கொடுத்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.

 

Tags :

Share via