தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் குளறுபடி ஏன்?

by Staff / 22-04-2024 01:46:16pm
தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் குளறுபடி ஏன்?

தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கமளித்தார். “செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றது. ஒரு சிலர் மட்டுமே அதில் அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via