கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி.. ரூ.75 ஆயிரம் அபராதம்

by Staff / 22-04-2024 03:25:18pm
கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி.. ரூ.75 ஆயிரம் அபராதம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பதவிக் காலம் முடியும் வரை கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி 'We the People of India' என்ற பெயரில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (ஏப்ரல் 22) விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு என்ன முகாந்திரம் உள்ளது? இவ்வாறு ஒரு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்?' என்று கூறி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளபடி செய்தது.

 

Tags :

Share via