மின் கட்டணம் அதிகம் என்று குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

by Staff / 07-11-2023 12:49:49pm
மின் கட்டணம் அதிகம் என்று குடும்பத்துடன் தற்கொலை முயற்சி


மதுரை நிலையூர் 9வது தெருவைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கட்டடத் தொழிலாளியாக உள்ளார். இவர் மனைவி ராஜபிரியா. மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மின் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.இவர் நேற்று மாலை 4: 00 மணிக்கு குடும்பத்துடன் திருநகர் மின் அலுவலகத்திற்கு வந்தார். 'வீட்டில் 2 டியூப் லைட்கள், ஒரு பேன் மட்டுமே உள்ளது. ஆனால் கடந்த முறை மின் கட்டணம் ரூ. 4500 வந்தது. இந்த முறை எவ்வளவு தொகை என்றே தெரிவிக்காமல் மின் இணைப்பை எப்படி துண்டித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு மின்பணியாளர்கள் 'இம்முறை ரூ. 1300' வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மின்கட்டணம் அதிகம் எனக் கூறிய உதயகுமார் குடும்பத்தினருடன் மின்வாரிய அலுவலக வாசலில் தான் தயாராக கொண்டு வந்திருந்த பெட்ரோலை குடும்பத்தினர் மீது ஊற்றியும், தன் மீதும் ஊற்றினார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்தனர். இதுகுறித்து திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via