கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வில் 23 பேர் காயம்

by Staff / 23-04-2024 01:52:04pm
கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வில் 23 பேர் காயம்

மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19 கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 23ம் தேதி சித்ரா பவுர்ணமி நாளான இன்று, காலை 6 மணியளவில் பச்சை பட்டுடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டு, ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின் போது 23 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via