பட்ஜெட்டில் வரி உயர்வை எதிர்பார்க்கலாம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

by Admin / 12-08-2021 02:31:14pm
பட்ஜெட்டில் வரி உயர்வை எதிர்பார்க்கலாம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

அரசின் திட்டங்களையும், தேர்தல் அறிக்கைகளையும் செயல்படுத்துவதில் நாங்கள் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் வரி உயர்வை எதிர்பார்க்கலாம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு பொருளாதாரம் பற்றி தெரியாது. அவருடைய உளறல்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் 110 விதியின் கீழ் 400-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். அவைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா?

தி.மு.க. அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். இதை கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டோம். அரசின் திட்டங்களையும், தேர்தல் அறிக்கைகளையும் செயல்படுத்துவதில் நாங்கள் பின்வாங்க போவதில்லை. பொதுவாக வரியை உயர்த்த வேண்டியதாக உள்ளது.

நாளை (13-ந் தேதி) தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு கற்பனை கருத்துக்கள் வெளியாகிறது. அது போன்ற யூகங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via