இப்படி செய்த இண்டிகோ ஏர்லைன்ஸ்… ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி

by Admin / 20-08-2021 01:30:31pm
இப்படி செய்த இண்டிகோ ஏர்லைன்ஸ்… ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலமாக விமானத்தில் பயணம் செய்ய கூடிய நபர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் மூலம் முக கவசம் தயாரித்து வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது ,அதன் அடிப்படையில் அந்த முக கவசத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக ஆய்வு மேற்கொண்டதில் அந்த பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது என ஆய்வு தெரிய வந்துள்ளது.
 
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் அடுத்த 7 நாட்களுக்குள் 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவு.

 

Tags :

Share via