ஆலங்குளம் அருகே ஆட்டோ மோதி வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்ற வாலிபர் ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளத்தை சேர்ந்தவர் மோசஸ். இவரது மகன் யோவான்(வயது 23).
இவர் நேற்று தனது நண்பர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாவூர்சத்திரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். வட்டாலூர் விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக யோவான் தனது மோட்டார் சைக்கிளை வலது புறம் திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளின் பெட்டி இடித்ததால் யோவான் சாலையில் தடுமாறி விழுந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி யோவான் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி யோவான் பரிதாபமாக இறந்தார்.
Tags :