8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

by Editor / 22-09-2021 04:56:29pm
8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

 

 ''திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில்  செப்.,22 இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: (செப்.,22): திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


 23ம் தேதி: கடலுார், விழுப்புரம்,திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.செப்., 24ம் தேதி: விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


செப்., 25ம் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.செப்.,26ம் தேதி: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரைஅடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும். ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (சென்டிமீட்டரில்):கலசபாக்கம் (திருவண்ணாமலை) 13 செ.மீ., வாணியம்பாடி (திருப்பத்துார்)செய்யார் (திருவண்ணாமலை) தலா 11 செ,மீ., டி.ஜி.பி. அலுவலகம் 10 செ.மீ., ஆரணி (திருவண்ணாமலை), தரமணி (சென்னை) தலா 9 செ.மீ., போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), நந்தனம் (சென்னை) தலா 8 செ.மீ., ஸ்ரீ பெரும்பதுார் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 7 செ.மீ., பெரம்பூர் (சென்னை) மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 6 செ.மீ., சென்னை மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் தலா 5 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.குறிப்பு:வட கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை:அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via