கடன் தொல்லையால் விஷம் குடித்த தாய், மகன் பலி

by Editor / 05-10-2021 09:33:19am
கடன் தொல்லையால் விஷம் குடித்த தாய், மகன் பலி

 நாமக்கல் மாவட்டத்தில் கடன் தொல்லையால் விஷம் குடித்த தாய், மகன் பலியாகினர். தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டையைச் சேர்ந்தவர் அக்பர் (60). இவரது மனைவி பாத்திமா (55), மகன் பர்கத் (30) ஆகிய 3 பேரும் குளிர்பானத்தில் விஷமருந்தை கலந்து குடித்ததில் மனைவி, மகன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அக்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பரமத்தி வேலூர் காவலர்கள் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் விஷம் மருந்து அருந்தி உள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via