1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற 90 வயது பாட்டி

by Editor / 13-10-2021 10:23:45am
1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற 90 வயது பாட்டி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் பெருமாத்தாள்.

90 வயதாகும் இந்த பாட்டி அசராமல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. கிராம மக்கள் அமோக வாக்களித்து பெருமாத்தாள் பாட்டியை ஊராட்சித்தலைவராக தேர்வு செய்துள்ளனர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் கைது செய்துள்ளார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்ட பெருமாத்தாள் பாட்டி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

Tags :

Share via