தமிழ்நாட்டில் 3 வது அலை அறிகுறி இல்லை: ராதாகிருஷ்ணன்

by Editor / 23-10-2021 03:28:08pm
 தமிழ்நாட்டில் 3 வது அலை அறிகுறி இல்லை: ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா 3 வது அலை ஏற்படுவதற்கான அறிகுறி ஏதும் தற்போது இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முழுவதும்  50 ஆயிரம் இடங்களில் 6 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,தமிழ்நாடு அரசின் கையிருப்பில் 66 லட்சம் தடுப்பூசிகள் உள்ள நிலையில், ஆறாவது மெகா தடுப்பூசி போடும் பணிதொடங்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


தமிழ்நாட்டில் சுமார் 1.8 கோடி பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 57 லட்சம் பேர் இதுவரை இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.


தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா 3 வது அலைக்கான அறிகுறிகள் இல்லை என்றாலும் 3 வது அலை வராது என்று உறுதியாக கூற முடியாது. எனவே, மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் முகக்கவசம் அணிவதையும் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via