பாலிடெக்னிக் தேர்வு கட்டுபாடுகள் நகை, பெல்ட், ஷூ அணிய தடை

by Editor / 23-10-2021 05:14:27pm
பாலிடெக்னிக் தேர்வு கட்டுபாடுகள்  நகை, பெல்ட், ஷூ அணிய தடை

 

 பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வரும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு வழிமுறைகளை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளது.


2017-18ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 28 முதல் 31ஆம் தேதி வரையிலும், காலை மற்றும் மாலை நேரத்திலும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.


இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு www.trb.tn.nic என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு, 22ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்படும். நேரடியாக வழங்கப்படாது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு நுழைவுச்சீட்டில், தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளளன.


அதில், "தேர்வர்களுக்கான தேர்வு மையம், மாவட்டம் போன்றவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கைப்படி குலுக்கல் முறையில் நடைபெறும். தேர்வு மைய நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்துக்கு, நுழைவுச் சீட்டின் பிரதியுடன் தேர்வர்கள் செல்ல வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்.


மேலும் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியும் தவறாமல் எடுத்து வர வேண்டும். காலை தேர்வுக்கு 7.30, பிற்பகல் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


தேர்வு மையத்திற்கு முன்பு காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் தேர்வர்களை சாேதனைச் செய்தப்பின்னர் அனுப்புவார்கள். தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதானப்பொருட்கள், கைபேசி, மைக்ரோ போன், கால்குலேட்டர், மடிக்கணினி, பேஜர், டிஜிட்டல் டைரி போன்ற மின்சாதனப் பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு மையத்தில் பொருட்களை வைத்தால் அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via