பாரதியார் பிறந்த நாள் விழா: தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை

by Editor / 11-12-2021 11:58:30am
பாரதியார் பிறந்த நாள் விழா: தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை

விடுதலைக்கவி, புரட்சிக்கவி, மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தின் கெளரவ ஆலோசகர் அருண் தலைமையில் மன்ற அலுவலகத்தில் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில், பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கி ராஜா, செயற்குழு உறுப்பினர் பார்த்திப சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பிரபாகர், மாணிக்கம், பாலகுமார், சித்திக், கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்

 

Tags :

Share via