கொரோனா கட்டுப்பாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 13-ஆம் தேதி ஆலோசனை.

by Editor / 11-12-2021 08:41:10pm
கொரோனா கட்டுப்பாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 13-ஆம் தேதி ஆலோசனை.


தமிழகத்தில் தற்போது  உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் வரும் திங்கள் கிழமை டிச.15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.மேலும் தற்போது  ஒமைக்ரான் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 13-ஆம் தேதி அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே 65 சதவீதம் மக்கள் முகக் கவசம் அணிவதில்லை என சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், 3ஆம் அலை வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுமென்றும், மேலும்தற்போது கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகளில் மாற்றம் இருக்குமா.இதே தொடருமா என்பது குறித்தும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தாலும் அன்றைய கூட்டத்தில் முதல்வர் அதிகாரிகளோடு ஆலோசனைமேற்க்கொண்ட பின்னர் எடுக்கும் முடிவுகளுக்கு பின்னரே  கட்டுப்பாடுகள் தெரியவரும்.

 

Tags :

Share via