மலர் கிரீடம் சூட்டி மாலை அணிவித்ததில் மயங்கிய மாவட்ட கல்வி அதிகாரி கூடலூருக்கு இடமாற்றம்

by Editor / 21-12-2021 10:11:56pm
மலர் கிரீடம் சூட்டி மாலை அணிவித்ததில் மயங்கிய மாவட்ட கல்வி அதிகாரி கூடலூருக்கு இடமாற்றம்

தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர்  சுடலை இவர் அனைத்து ஆசிரியர்களிடமும் சகஜமாக மடிப்புகொள்ளும் பழக்கமுடையவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  கடையம் பகுதியிலுள்ள ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார்.அந்த பள்ளி சார்பில் கல்வி அதிகாரிக்கு   மலர் கிரீடம் சூட்டி மாலை அணிவித்து ,பூங்கொத்து வழங்கிபொன்னாடை போர்த்தி உள்ளனர்.இதனை மகிழ்ச்சியோடு மாவட்ட கல்வி அலுவலர் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் அந்த பள்ளியில் அலங்காரத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ளும்  புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தென்காசி முதன்மை கல்வி அதிகாரிக்கு  உத்தரவிட்டார். இதையடுத்து இன்று தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு மாற்றப்பட்டார்.


 

 

Tags :

Share via