மாணவிகளுக்கு இருபது ஆயிரம் தரப்போகும் சித்து

by Admin / 04-01-2022 06:35:36pm
மாணவிகளுக்கு இருபது ஆயிரம் தரப்போகும் சித்து

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத்தக்க வைப்பதற்கு பகீரதபிரத்யனம் செய்து வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியைப்பிடித்துவிடவேண்டுமென்று தீவிர பிரச்சார முனைப்பில் ஈடுபட்டிருக்கிறது. இவ்விரு கட்சிகளின் பிரச்சார உத்தி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருக்கினறன. இவ்வகையில்,காங்கிரசு கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய நவ்ஜோத் சித்து,உயர்க்கல்வி பயிலும்மாணவிகளு க்கு டேப்லெட் வழங்க உள்ளதாக குறிப்பிட்ட அவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 5.000ரூபாயும் ப்ளஸ் 2தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு15,000ரூபாயும் பள்ளி படிப்பு நிறைவு பெற்றதும் மாணவிகளுக்கு 20,000ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கபெறும் என்றார்.ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அறிவிப்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்,பஞ்சாப் மக்கள்.

 

Tags :

Share via