குற்றாலம் மெயினருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் குறைந்தது.

by Editor / 17-01-2022 01:40:54pm
குற்றாலம் மெயினருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் குறைந்தது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த பல நாட்களாக மழை இல்லாத நிலை நீடித்து வருகின்றது. இந்த நிலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட பகுதிகளில் கொரொனோ விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதன் காரணமாக 3 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அருவிகளில் குறைந்த அளவே கொட்டும் நீரில் குளிப் பதற்கு ஐயப்ப பக்தர்கள் கூட்டமும்.சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைந்த அளவில் காணப்படுகின்றது.  

 

Tags :

Share via