காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுயேட்சை உறுப்பினர்
சென்னை மாநகராட்சித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக 23-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி. ராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மாநகராட்சி மன்ற உறுப்பினர் பி. ராஜன் சென்னை மாநகராட்சி மன்ற இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக அங்கீகரிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் வழங்கியுள்ளார்..எனவே, பி. ராஜன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு சென்னை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13இல் இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது.
Tags : காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுயேட்சை உறுப்பினர்