அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து

by Editor / 05-04-2022 08:38:31am
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ  விபத்து

 கமுதி அருகே பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் குடியிருப்பு பகுதியில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளிலில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிநடைபெற்றது.
இந்த கட்டிடம்  பழைய மருத்துவர்கள் ,செவிலியர் குடியிருப்பு என்பதால் தற்போது அங்கு மருத்துவர்,செவிலியர் யாரும் தங்கவில்லை இதனால்எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.மேலும் அங்கிருந்த  மருத்துவ உபகரணங்கள் அனைத்தும்  தீயில் எரிந்து சேதமடைந்தன.இந்த தி விபத்து குறித்து பேரையூர் போலீசார்  விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via