14 வயது சிறுமியை மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை

by Staff / 11-04-2022 03:32:39pm
 14 வயது சிறுமியை மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றும் சமர் கோலி, தனது மகனான சோஹல் பிறந்தநாளை கடந்த திங்கட்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடினார். 

இந்த பிறந்தநாள் விழாவிற்கு 9வது படிக்கும் சிறுமி ஒருவர் சென்றுள்ளார். இதனையடுத்து பிறந்தநாள் விழாவை முடித்து வீடுதிரும்பிய அந்த சிறுமி, மிக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்றுள்ளார். இதனால் உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால்  சிறுமின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார் அந்த சிறுமி தனியாக விருந்துக்கு சென்றாரா அல்லது சக நண்பர்கள் உடன் சென்றாரா என விசாரித்து வந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் சோஹல் தான் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக . அதன்படி சோஹலை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via