இன்று முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் திறப்பு

by Editor / 18-04-2022 08:10:15pm
 இன்று முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் திறப்பு

தீப்பெட்டி மூலப்பொருட்களின்  விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்தியரசு தடை செய்ய என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 6ம்தேதி  முதல் வரும் 17ஆம் தேதி வரை அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மற்றும் அதன் சார்புத் தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும்  2000க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என அனைத்து ஆலைகளும் மூடப்பட்டதால்  நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாயை உற்பத்தி பாதிக்கப்பட்டது.அது மட்டுமன்றி, ‌ 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டஇருந்த நிலையில் மேலும் போராட்டம் தொடர்ந்தால் தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு  இன்று தமிழகம்  முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் இன்று திறக்கபட்டன.

 

Tags : Match factories open across Tamil Nadu from today

Share via