தவறான உறவில் இருந்த தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

by Staff / 23-04-2022 05:30:09pm
தவறான உறவில் இருந்த தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

கோவை மாவட்டம் புலியகுளம் அருகே வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்த தந்தையே மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் வசித்துவந்த கருப்பசாமி வசந்தா தம்பதிக்கு சுரேஷ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். தூய்மை பணியாளரான கருப்பசாமிக்கு புலியகுளம் பகுதியைச் சேர்ந்த  வேரா ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்துள்ளது இதனை அறிந்த வசந்தா கருப்பசாமியை பிரிந்து வேறு பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கருப்பசாமி தனது ஓய்வூதிய பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் தன்னுடன் தவறான உறவில் இருந்த பெண்ணிடம் கொடுத்ததாகவும் பணத்தை கொடுக்கும்படி மகன் சுரேஷ் கேட்டு அவர் தரமறுத்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த  சுரேஷ் மதுபோதையில் அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் படுத்து கிடந்த கருப்பசாமியை நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது இதனையடுத்து போலீசார் சுரேஷை  தேடி வருகின்றனர்

 

Tags :

Share via