கல்குவாரியில் கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது ராட்சத பாறை உருண்டு விழுந்தது.

by Editor / 25-04-2022 04:43:28pm
கல்குவாரியில் கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது ராட்சத பாறை உருண்டு விழுந்தது.

கரூர் அருகே தனியார் கல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி மீது ராட்சத பாறை விழுந்த விபத்தில் லாரிக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுனரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.காங்கயம்பாளையம்  கிராமத்தில் செயல்பட்டு வரும் சுமார் 300 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு மேலே வருவது வழக்கம். அந்த வகையில் சுமார் 200 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு மேலே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் இருந்த ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் ஓட்டுநர் சுப்பையா டிப்பர் லாரிகள் சிக்கிக்கொண்டார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வேலாயுதம் தீயணைப்பு துறையினர் ஓட்டுநரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via