தங்கம் கடத்தலில் கேரள முதலமைச்சர்கள் தொடர்பு என குற்றச்சாட்டு பதவி விலக கோரி எதிர்கட்சிகள் போராட்டம்

by Staff / 09-06-2022 12:07:31pm
தங்கம் கடத்தலில் கேரள முதலமைச்சர்கள் தொடர்பு என குற்றச்சாட்டு பதவி விலக கோரி எதிர்கட்சிகள் போராட்டம்

தங்கம் கடத்தலில் கேரள முதலமைச்சர்கள் தொடர்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். மேலும் மாநிலம் முழுவதும் கருப்பு தினமும் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல்கள் வழியாக தங்கம் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளசொப்னா  நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்கு மூலத்தில் தங்கம்வெளிநாட்டுக்கு கடத்தலில்  பிரனாய் விஜயன் அவரது மனைவி மகள் உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via