அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு 26 ஆம் தேதி ஒத்திவைப்பு

by Staff / 22-03-2024 02:04:45pm
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு 26 ஆம் தேதி ஒத்திவைப்பு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக கூறி அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு செய்துள்ளது

இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் அமலாக்க துறையினர் யாரும் ஆஜராக நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மட்டும் ஆஜராகினர்


இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மாவட்ட நீதிபதி செல்வம் வரும் 26 ஆம் தேதிக்கு ஓத்திவைத்து உத்தரவிட்டார்

 

Tags :

Share via