நடிகை ஆயிஷா சுல்தான் மீதான தேசத்துரோக வழக்குகளின் விசாரணையை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.

by Staff / 09-06-2022 12:28:34pm
நடிகை ஆயிஷா சுல்தான் மீதான தேசத்துரோக வழக்குகளின் விசாரணையை நிறுத்த  உச்சநீதிமன்றம் உத்தரவு.

லட்சத்தீவை  சேர்ந்த நடிகையும் மாடலுமான சுல்தான் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேசத்துரோக வழக்கு குறித்து பரிசீலித்து முடிவை அறிவிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்ததன் அடிப்படையில் ஆயிஷா சுல்தான்  மீதான வழக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு விசாரணை ஏதும் நடைபெறாது .மலையாள தொலைக்காட்சி விவாதத்தில் கோவிட் பரவல்  குறித்து மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய ஆயிஷா மீது பாஜக புகாரின் பேரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via