ஆலங்குளம் அருகே இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 29 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளை

by Editor / 04-08-2022 05:20:00pm
ஆலங்குளம் அருகே இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 29 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளை

ஆலங்குளம் அருகே அழகாபுரி பாபநாசபுரம்  கிராமத்தைச் சேர்ந்தவர்  வேதாள செல்வம் வயது (38) .  இரும்பு கடை வைத்துள்ளார் இவர் நேற்றிரவு   அருணாசலப் பேரி கிராமத்தில் உள்ள சாஸ்தா  கோவில் கொடை க்காக குடும்பத்துடன் சென்றுள்ளார் நள்ளிரவில்   கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்  பீரோவில் வைத்திருந்த  ரூபாய் 29 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை  கொள்ளையடித்து சென்றனர் இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரிக்கிறார்கள்   இரும்பு வியாபாரி வீட்டில் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via