ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி இசைக் கலைஞரிடம் 54 லட்சம் பண மோசடி
ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறையை சேர்ந்த இசைக் கலைஞரிடம் ஐம்பத்தி நான்கு லட்ச ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்ட வெளிநாடு தப்பிச் செல்ல இருந்த நபரை போலீசார் கைது செ ய்தனர். பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பூரணசந்திரன் தன்னுடன் தொழில் முறை பழக்கத்தில் உள்ள நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களான செந்தில் குமரன் உட்பட 26 பேரிடம் ஜெர்மனியில் வேலை இருப்பதாக கூறி இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை பெற்று அங்கு பணி புரிவதற்கான போலி விசா வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சென்னை பூந்தமல்லி தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கைது செய்து 12 லட்சம் பறிமுதல் செய்தனர்.
Tags :