மதுரை புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால்- ஒத்திவைப்பு-ஆட்சித்தலைவர் அறிவிப்பு.   

by Editor / 28-08-2022 10:38:13pm
மதுரை புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால்- ஒத்திவைப்பு-ஆட்சித்தலைவர் அறிவிப்பு.   

சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழகத்தில் மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து,குற்றாலத்தில் நடைபெற்ற சாரல் விழாவில் 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக  மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்த பதிப்பாளர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் செப்டம்பர் 3ம் தேதி முதல் 13 வரை புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம், தொடர்பான பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருந்தது. இந்நிலையில் புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமுக்கம் கலை அரங்கத்தில் செப்டம்பர் மாதம் 3ம் தேதி - 13ம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாகவும், புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மதுரை மாவட்ட கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via